skip to main  |
      skip to sidebar
          
        
          
        
பாரத சமுதாயம்
- மனிதருணவை மனிதர் பறிக்கும்
 - வழக்கம் இனியுண்டோ ?
 - மனிதர் நோக மனிதர் பார்க்கும்
 - வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
 - வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
 - வாழ்க்கை இனியுண்டோ ?
 - இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
 - எண்ணரும் பெருநாடு,
 - கனியும் கிழங்கும் தானி யங்களும்
 - கணக்கின்றித் தரு நாடு - இது
 - கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
 - கணக்கின்றித் தரு நாடு .
 
 - இனியொரு விதிசெய் வோம் - அதை
 - எந்த நாளும் காப்போம்,
 - தனியொரு வனுக் குணவிலை யெனில்
 - ஜகத்தினை அழித்திடு வோம் .
 
 - எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
 - என்றுரைத்தான் கண்ண பெருமான்,
 - எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
 - இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
 - இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
 - இந்தியா உலகிற் களிக்கும் .
 
 - எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
 - எல்லாரும் இந்திய மக்கள்,
 - எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
 - எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
 - எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
 - எல்லாரும் இந்நாட்டு மன்னர் .
 
 
 
 
          
      
 
  
 
 
 
  
No comments:
Post a Comment