என் காதல்

மறந்திராத
stay in touch
i will miss u
இப்படி பிரிவுக்கான
எத்தனையோ வரிகளில்
ஒன்றுகூட உச்சரிக்கப்படாமல்
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு

நிதர்சனம் உடைத்த கண்ணாடியில்
முகம் பார்த்து
தன்னைத்தானே
அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறது
காதல்

உன் பெயரை
சப்தமில்லாமல் உரக்க அழைத்தில்
வலிக்கிறது மனது
வலியினூடே ரகசியமாய்
கேட்க நினைக்கிறது
"என் நினைவுகள் உனக்கு வருமா??"

இயல்பாய்....
பிரிந்து போனாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு
பிரிவதற்கான கடைசி நேரங்களில்
என் கண்ணில் நிலைகுத்தி நின்ற
உன் பார்வை
'புரிகிறது' என்று சொன்னதாய்
புரிந்துகொள்கிறது மனது.

நீ இல்லாத போதும்
நினைவுகளில் உன் இருப்பை
கண்காணித்துக் கொண்டே இருக்கிறது
உன் கண்கள்

இன்று இல்லாவிட்டாலும்
என்றைக்காவது சொல்லிப்போ..
புரிந்து கொண்டதாய்
இல்லையென்றாலும்
தெரிந்து கொண்டதாய்
என் காதலை

மடல்

அன்புள்ள ..... ,
ஞாபகமிருக்குமென்றே
நினைக்கிறேன்
என் பெயர் உனக்கு..

வழக்கமான தொடக்கம்தான்
இருந்தும் அறிந்தே இருக்கிறேன்
சத்தமாய் உச்சரிக்க சத்தமில்லாமல்
ஏங்கும் உன் மனதை

மழைபெய்து ஓய்ந்த
மாலைநேர தேநீர் போல
இனம்புரியாத இதமாக இருக்கிறது
உன் நினைவுகள்

இருபத்தி எட்டு வருடங்கள்.

பேருந்து பயணம் போல
கடந்துவிட்டது வாழ்க்கை
இதில் ஆறு வருடங்கள்
உன் தோள் சாய்ந்து...

தெரிந்தும் தெரியாமலும்
தோள்வாங்க நினைத்து
விழுந்து காயப்படுகிறேன்
இப்போதெல்லாம்

காயங்களை நினைத்து
நானே சிரித்துக் கொள்கிறேன்
எல்லோருடன் சேர்ந்து...

ஆனாலும்
இன்னும் நினைவிருக்கிறது
மெதுவாய் புன்னகைத்து
தலையை திருப்பி
நீ
கண்களை துடைத்துக் கொண்டதை

அது எனக்காக
என்று சந்தோசமாய்
இருந்த தருணத்தில் தான்
நடுத்தெருவில்
எனை கதறி அழவிட்டு
கைப்பிடித்து போகப்பட்டாய்

இன்றும்
உதடுகளை புன்னகைக்க விட்டு விட்டு
அழுது புரள்கிறது
மனது

இன்றும் அன்புடன்

உன் உறவு

ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என்
மனதை உடைத்தவ
ன்- நீ

உனக்காக உருகியது
என்னிதயம்...

இதயங்கள் ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...

நிரந்தரமாக நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும் பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால் முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...

உன் உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக...

உன்னை தான் காதலிக்கிறேன்

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.


அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை

பிரிவு


நெருப்பை நெருங்கும்

விட்டில்பூச்சியைப்போலவே..

பிரிவின் வலியை

மேலும் ரணமாக்கும்

என்றறிந்தே சேமிக்கிறேன்

உன்னுடனான என்

ஒவ்வொரு நொடிகளை..

உன்னோடு


பார்க்க.. பேச.. அழ.. சிரிக்க..
சண்டையிட.. முத்தமிட..

கோபப்பட.. அணைக்க.. தவிக்க..
தேட.. வாட.. கூட.. பிரிய..

காத்திருக்க.. நோக..
ரசிக்க.. ருசிக்க.. பகிர.. சாய..

ஏங்க.. தூங்க.. நெருங்க.. விலக..
கனவு காண.. தலை கோத.. கை கோர்க்க..
எதிர்பார்க்க.. இம்சிக்க.. சகிக்க.. சுகிக்க..

காதலிக்க.. வாழ..
ஏன் சாகக் கூட சுகமாய்தான் இருக்கிறது
உன்னோடு மட்டும்……….

கற்பனை


எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !

ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

Followers