நம் காதல்!



உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட

முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி

வெற்றிச் சரித்திரமானது

நம் காதல்!

நினைத்த பொழுது

பாயை விரிக்கும்

உரிமை பெற்ற நேரம்...

நம் காதல்

சுருட்டப்பட்டது...

கனவுகள்


வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும் உன்னை
தேடி தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே கிடைத்தாய்!
கிடைத்தும் தொலைத்தேன்!
தொலைத்தும் தேடுகிறேன்!
தேற்றம் அடைய முயன்று
மறுபடி தோற்கிறேன்
என்னிடமே நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு எனும் நெருப்பில்
ஜனகனின் மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது என் மனம்
பூக்க துடிக்கும் அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம் என்னும்
தண்ணீர் ஊற்றி விட்டு போ
உயிர் பெற்று விடும்!

தினமும் ஒரு போராட்டம்


வாழவும் முடியாது,
சாகவும் முடியாது
தினமும் ஒரு போராட்டம்...
எனக்குள்

ஒவ்வொரு நொடியும்
தற்கொலைக்காக
ஓராயிரம் வழிகள் யோசித்து
உதவாத காரணங்களுக்காய்
உதறி நிற்கும் இயலாமை.

என்ன செய்கிறேன்
என்ற நினைப்புமின்றி
எதிர்கால சிந்தனையுமின்றி
நகருமிந்த கொடுமை

கத்தியின்றி ,கலகமின்றி
எத்தனை வேதனை ?

வார்த்தையுமின்றி
சில வலிகள் மிச்சம்

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு....

கண்ட கனவுகள்
உன் மீது கொண்ட அன்பு
எல்லாவற்றுக்கும் அன்னியமானேன்
என்னையாவது திருப்பி தந்து விடு எனக்கு

உணவு செல்லவில்லை
உடலை வருத்துகிற தண்டனை
கண்களில் கதறும் கண்ணீர் சாட்சி

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு
என்பது வரையிலாவது பேசு
எதுவும்
கட்டாயமில்லை இங்கே

பொருந்தாத என் காதல்
வீணான கேள்விகள்
வெளியில் தெரியா காயங்கள்
வாழ்வதற்கான நம்பிக்கை கூட
மிச்சமில்லை என்னிடம்

உனக்கு என்ன வேண்டும்
உண்மையாய் கேட்டு விடு
நீ விரும்பியது
எதையாவது கடைசியாய் கொடுத்து விட
ஆசை இருக்கிறது இன்னும்..

வெற்றியுமில்லை,
தோல்வியுமில்லை

உன்
வழியில் நீ போக
விட்டு கொடுத்து,
கெட்டதாய் இருக்கட்டும்
என் பிரியம்

இழப்பின் கணங்கள்


உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென
அடைந்திருந்த கணங்களிலோ
அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை
இழப்பின் கணங்கள்
இந்தக் குளிர் இரவில்
தின்று வாழ்கின்றன
அடைதலின் கணங்களை

நீ வேண்டும் எனக்கு!


அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு

Followers