நம் காதல்!



உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட

முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி

வெற்றிச் சரித்திரமானது

நம் காதல்!

நினைத்த பொழுது

பாயை விரிக்கும்

உரிமை பெற்ற நேரம்...

நம் காதல்

சுருட்டப்பட்டது...

கனவுகள்


வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும் உன்னை
தேடி தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே கிடைத்தாய்!
கிடைத்தும் தொலைத்தேன்!
தொலைத்தும் தேடுகிறேன்!
தேற்றம் அடைய முயன்று
மறுபடி தோற்கிறேன்
என்னிடமே நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு எனும் நெருப்பில்
ஜனகனின் மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது என் மனம்
பூக்க துடிக்கும் அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம் என்னும்
தண்ணீர் ஊற்றி விட்டு போ
உயிர் பெற்று விடும்!

தினமும் ஒரு போராட்டம்


வாழவும் முடியாது,
சாகவும் முடியாது
தினமும் ஒரு போராட்டம்...
எனக்குள்

ஒவ்வொரு நொடியும்
தற்கொலைக்காக
ஓராயிரம் வழிகள் யோசித்து
உதவாத காரணங்களுக்காய்
உதறி நிற்கும் இயலாமை.

என்ன செய்கிறேன்
என்ற நினைப்புமின்றி
எதிர்கால சிந்தனையுமின்றி
நகருமிந்த கொடுமை

கத்தியின்றி ,கலகமின்றி
எத்தனை வேதனை ?

வார்த்தையுமின்றி
சில வலிகள் மிச்சம்

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு....

கண்ட கனவுகள்
உன் மீது கொண்ட அன்பு
எல்லாவற்றுக்கும் அன்னியமானேன்
என்னையாவது திருப்பி தந்து விடு எனக்கு

உணவு செல்லவில்லை
உடலை வருத்துகிற தண்டனை
கண்களில் கதறும் கண்ணீர் சாட்சி

என்ன செய்ய வேண்டும்?
நான் உனக்கு
என்பது வரையிலாவது பேசு
எதுவும்
கட்டாயமில்லை இங்கே

பொருந்தாத என் காதல்
வீணான கேள்விகள்
வெளியில் தெரியா காயங்கள்
வாழ்வதற்கான நம்பிக்கை கூட
மிச்சமில்லை என்னிடம்

உனக்கு என்ன வேண்டும்
உண்மையாய் கேட்டு விடு
நீ விரும்பியது
எதையாவது கடைசியாய் கொடுத்து விட
ஆசை இருக்கிறது இன்னும்..

வெற்றியுமில்லை,
தோல்வியுமில்லை

உன்
வழியில் நீ போக
விட்டு கொடுத்து,
கெட்டதாய் இருக்கட்டும்
என் பிரியம்

இழப்பின் கணங்கள்


உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென
அடைந்திருந்த கணங்களிலோ
அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை
இழப்பின் கணங்கள்
இந்தக் குளிர் இரவில்
தின்று வாழ்கின்றன
அடைதலின் கணங்களை

நீ வேண்டும் எனக்கு!


அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு

நினைவுகள்

கண் கசியும்
நேரமாயினும்
கலையாமல்
கவிழ்த்து வைக்கப்பட்ட
என் இதயம்
கலைந்து போகாமல்
நிலைத்திருக்கும்
உன் நினைவுகள்....

தேவதை நீ


நீல வானம்
நீளமான நதி
நொடிகளின் வேகம்
பௌர்ணமி நிலா
பாலின் வெண்மை
பூக்களின் வாசம்
குழந்தையின் முத்தம்
குளிர்கால தென்றல்
ம்.....
இன்னும் என்னென்னவோ
கற்பனையில்
கண்டுவிட முடியாத
கனவு தேவதை நீ

உனக்கான என் கவிதைகள்


உதிர்ந்த சருகுகளாய்
உடைந்துபோன என்
இதயக் குவியல்கள்
கொளுத்திவிட்டு போகிறது
உனதிரு விழிகள்.

கோடி நட்சத்திரங்கள்
இருந்தாலும்
நிலவில்லாத வானம்
நீ இல்லாத
நாட்களில் நான்.

பகல்நேர நிலவு
இரவுநேர மழை
நீரற்ற அருவி
எப்படி எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்..

Buddha


Every living being has the same basic wish – to be happy and to avoid suffering. Even newborn babies, animals, and insects have this wish. It has been our main wish since beginningless time and it is with us all the time, even during our sleep. We spend our whole life working hard to fulfil this wish.

Since this world evolved, human beings have spent much time and energy improving external conditions in their search for happiness and a solution to their many problems. What has been the result?

Instead of their wishes being fulfilled, human suffering has continued to increase while the experience of happiness and peace is decreasing. This clearly shows that we need to find a true method for gaining pure happiness and freedom from misery.

When things go wrong in our life and we encounter difficult situations we tend to regard the situation itself as the problem, but in reality whatever problems we experience come from the side of the mind. If we were to respond to difficult situations with a positive or peaceful mind they would not be problems for us; indeed we may even come to regard them as challenges or opportunities for growth and development. Problems arise only if we respond to difficulties with a negative state of mind. Therefore, if we want to be free from problems we must learn to control our mind.

இதயம்

தெரியாத போது
தெரிந்து கொள்ள ஆசைப்பட்டடாய்
தெரிந்த போது
தெருவில் விட்டாய்.

உறவாக நீ இருந்தாய்
உள்ளம் பூரித்தது
உதறிவிட்டாய் என்று
உள்ளம் நோகிறது.

வார்த்தைகளால் நேசித்தாய்
வரமாக நான் நினைத்து
உறுதியான உறவென்று
உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

உன் வார்த்தைகளை கேளாது
இதயம் வேகிறது.

My Feelings...


I'm trying to talk to you, but I don't know what to say.

I am afraid you don't want me to say anything, So I don't.

But inside me there are words waiting to come out and tell you how I feel-like and how I miss you and how I love you despite my broken heart and how I need you in my life and especially how much I want you.

But those words may forever stay in my heart-locked inside.Sometimes I wonder if there may be words locked inside you too...

But I'll never know........???

Missing You A Lot....


As I sit Alone, I remember those beautiful moments

We spent together...

I miss the soft touch of your hand...

I miss the whispering words of yours...

I miss spending hours & days with you doing nothing yet loving it now....

I'm Waiting till we can meet again....

Because I believe my love is forever and neither time nor distance can take you away from me !

Loneliness is a feeling


Loneliness is one of the scourges of humanity.It seems to affect everyone regardless of age or ethnicity.It is a FEELING that intimacy, understanding, friendship, and acceptance are missing from one's life. It is a FEELING of isolation or separation from others, a FEELING of being all alone. We need to realize that loneliness is nothing more than a feeling.

All right, I feel lonely and want to do something about it, so what must I do? Start by understanding a simple law of life which can help solve almost any problem. That law is: You have to give away what you wish to receive. Our actions are balls that bounce back to us.For being alone is an opportunity for reflection, self-discovery, and growth. You will never be lonely if you like the person you are with. And no matter where you go, you will always be accompanied by yourself, so get to know and like that person.


If you need a hand, you'll find it at the end of your own arm.

உன்னால்

விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!

ஹைக்கூ

குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை...

வேதனை ஆனால் உண்மை

பட்டதாரிகளை பட்டியல் இட முடியாது
அவர்களின்
வளர்ந்த தாடிக்கும்
விளக்கம் கூற முடியாது !

வியாபாரம் நடத்த நம்மவர்கள்
எடுத்துக்கொண்ட
பொருள் “கல்வி”
பள்ளிக்கு தேவை
நோட்டு புத்தகங்கள் இல்லை
நோட்டு கட்டுகள் மட்டுமே!

வலது கையில் கையெழுத்து
இடது கையில் கையூட்டு
அரசு அலுவலகத்தில்
அமர்ந்திருக்கும் அவனுக்கு
போதா குறைதான்
பெண்டாட்டி வடிவில்!

கோட்டை முதல்
குடிசை வரை
குள்ளநரிகள்
சுகமாய் சுலபமாய்
சுரண்டுகின்றன.

காவல் நிலைங்களில்
கற்புகள் விலை பேச படுகின்றன

கல்வி சாலைகள் காசுக்காக
கையேந்துகின்றன

நித்தமும் பொதி சுமக்கும் கழுதைகள்
மாநகர பேரூந்து எனும்
பகவான்ங்கள்
படிகட்டில் பார்க்கலாம்
தற்காலிகமாய் உருவாகும்
பாரதத்தின் ஒற்றுமையை !
தொங்கும் தொப்பை வயிற்றில்
முட்டி மோதி
முழுசாய் ஏறினால்
உள்ளே ரசிப்பவர்களின்
கண்கள்
ரவிக்கையில் மட்டுமல்ல
இடையே தெரியும்
இடையிலும் தான்.....

காதல்

காதல் தேசத்தில்
மிச்சம் இருவர்.......
அவள்
காதலித்து தொலைத்தவள்.
இவன்
காதலை தொலைத்தவன்.

தவிப்பு

கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.

நானும் காதலிக்கிறேன்

காதலித்தால் தான்
கவிதை வருமாம்!!

நானும் காதலிக்கிறேன்
கவிதைகளை....

ஆம்,
என் கவிதை காதலி
எனக்கு கிடைக்க‌
எப்பொழுதும் அலைந்து
கொண்டிருகிறேன்
க‌விதைகளை தோன்றவைக்கும்
காத‌லியை தேடி!

இவன்


தேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

சிந்தனைகள்


சிந்தனைகள் சிதற,
எண்ணங்கள் எங்கோ எகிற,
குமையும் எரிமலையாக,
காத்துக்கொண்டிருக்கிறேன்,
சிறு தூண்டலிலும் வெடியக்கூடிய அந்த கணத்திற்காக

உன் நினைவு


உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!

'விழி ஈர்ப்பு விசை'

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
உன்னை எனக்குக் காட்டியது

குழந்தைகள்

நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத
பிஞ்சு உள்ளங்கள் அழகு

சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்

சொல்லாமல் சொன்னவை


தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.

உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,

உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.

காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து...

அப்பா


என் அப்பாவிற்கு
ஒரு நாளும்
உதவியதில்லை...

ஆனாலும்
என் எல்லா
தேவைகளையும்
அறிந்து
நான் சொல்லும் முன்பே
செய்து தருபவர்...

உன் நினைவுகள்


எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி மறக்கமுடியும்..
.

It's Because Of You


From the sadness that's hiding inside me
behind those rivers that flows in my eyes
all the happiness that's ruined by sorrows
and all the nights filled with incubus

Dark past keeps on flashing back
forcely matured by insane expiriences
a life that's full of sadness
I'm strugling for it,looking for happiness

How come I'm still alive?
still fighting for this meaningless life
maybe It's because of you
completing my damn, useless life...

Followers