முற்றத்தில் வீழ்ந்தபோது
வினைப் பின்னமில்லா
விடலைப் பருவத்திலே
முத்துக்களாய் சேகரித்தேன்!
சன்னலில் சாறலாய்
முத்தங்கள் பதித்தபோது
உடைந்த துளிகள்
உலர் உள்ளத்தை
நனைத்தது உணர்ச்சியால்!
தோட்டத்தில் தூறலாய்
பூவிதழில் பொதிந்தபோது
தழுவாத தருணங்கள்
எண்ணிய தவிப்புகளெத்தனை!
சாப்ளின் சொன்னதுபோல்
உன்னோடு உறவாடும்போது
உப்புநீர் உமிழும்
என்றும் என் கண்ணோடு
No comments:
Post a Comment